யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் இன்று(14) மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதம்
இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கு நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், பிரதம
கணக்காளர் எஸ் கிருபாகரன், உத்தியோகத்தர் கள்
உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.






