யாழில் போதைபொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (19) பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி
காவல் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நெல்லியடி
காவல்துறையினரால் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

