முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழிலாளர்களை மூச்சுவிட வைத்த ரணிலுக்கு வாக்களிப்போம்: யாழ் கடற்றொழில் அமைப்புக்கள் வேண்டுகோள்!

இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களினால் அழிக்கப்பட்டு வந்த எமது வாழ்வாதாரத்தை
பாதுகாத்து வரும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம்
ஏற்ற வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று(18) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கடற்றொழிலாளர்கள் இந்திய எல்லை தாண்டிய
கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய கடற்றொழிலினால்
பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விடயம் இன்று – நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல. நாங்கள் இலங்கையை ஆட்சி செய்த
ஐந்து ஜனாதிபதிகளிடம் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல் தொடர்பில் பல கோரிக்கைகளை
முன்வைத்தோம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலத்திலும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை
காணப்பட்டாலும் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடற்றொழிலாளர்களை மூச்சுவிட வைத்த ரணிலுக்கு வாக்களிப்போம்: யாழ் கடற்றொழில் அமைப்புக்கள் வேண்டுகோள்! | Jaffna Fisheries Organisations Support To Ranil

அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் வடபகுதிக் கடலில் அத்துமீறி வருகை தந்த
இந்திய ரோலர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதுடன் ஏமது கடற்றொழிலாளர்கள்
சுதந்திரமாக அமையும் படியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியா தரப்புகளுடனும் எமது
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் எல்லை தாண்டும்
இந்திய ரோலர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

கடற்றொழிலாளர்களை மூச்சுவிட வைத்த ரணிலுக்கு வாக்களிப்போம்: யாழ் கடற்றொழில் அமைப்புக்கள் வேண்டுகோள்! | Jaffna Fisheries Organisations Support To Ranil

ஆகவே எமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியன் ரோலர்களை முற்றும் முழுதாக தடை
செய்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.