முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய இழுவை மடியினால் பாதிக்கப்படும் யாழ்.கடற்றொழிலாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய (India) இழுவைமடித்
தொழிலாளர்களினால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலியை அடகு
வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் சமாசத்தின்
பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்துள்ளார்.

மாதகல் பகுதியில் இன்றையதினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் அத்துமீறிய இழுவைமடித்
தொழிலாளர்களினால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து
வருகின்றனர்.

பல கோடி ரூபாய் இழப்பு 

எமது கடற்றொழிலாளர்களின் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் தொடர்ச்சியாக
அறக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு கடற்றொழிலாளர்களுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய இழுவை மடியினால் பாதிக்கப்படும் யாழ்.கடற்றொழிலாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Jaffna Fishermen Affected By Indian Trawler

இன்றையதினம் வியாழக்கிழமை மாதகல் கடற்பரப்புக்குள் இந்தியாவின் அத்துமீறிய
இழுவைமடி தொழிலாளர்கள் மூன்று படகுகளில் வருகை தந்த நிலையில் கடற்படையினரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் எமது கடற்றொழிலாளர்களின் இருபதுக்கும் மேற்பட்ட  வலைகள் அறுத்து நாசம்
செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான இழப்பீடு வழங்குவது யார்?

கைது நடவடிக்கை

ஒவ்வொரு கடற்றொழிலாளரின் குடும்பமும் இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் கோடி
ரூபாக்களை இழந்த நிலையில் பலரின் நகைகள் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளன.

இந்திய இழுவை மடியினால் பாதிக்கப்படும் யாழ்.கடற்றொழிலாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Jaffna Fishermen Affected By Indian Trawler

எனது பிள்ளைகளின் மீன்பிடி வலைகளும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால்
அறுக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வலைகளை வாங்குவதற்காக எனது தாலியை வங்கியில்
அடகு வைத்தேன்.

மீண்டும் தொடர்ச்சியாக இந்தியா இழுவமடி படகுகளின் அத்துமீறலால் எனது
பிள்ளைகளின் வலைகளும் அறுக்கப்பட்டு தரும் நிலையில் எனது வங்கியில் அடகு
வைக்கப்பட்ட தாலியை மீள முடியாமல் உள்ளது.

ஆகவே, இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளை நமது கடற்பரப்புக்குள் நுழைய விடாமல்
கடற் படையினர் அவர்களை தொடர்ச்சியாக கைது செய்ய வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.