யாழில் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்
தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று முன்தினம் (15) தாவடி பகுதியில் இரண்டாவது மாடியில் வேலை செய்த போது தவறி முதலாவது மாடியில் விழுந்துள்ளார்.
இதையடுத்து, அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

