யாழில் இளைஞர் ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரும்பிராய் வடக்கு, உரும்பிராய்
பகுதியைச் சேர்ந்த சிவகுமார் அகீபன் (வயது 31) என்பவரே இவ்வாறு
உயிர்மாய்த்துள்ளார்.
வட்டிக்கு பணம்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு
அடிமையாகியுள்ளார்.

 இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த கேமிற்கான
கட்டணத்தை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.
காணி விற்பனை
மீட்டர் வட்டிக்கு கடனாக பெற்ற பணமானது வட்டியும் முதலுமாக ஒரு கோடியை தாண்டிய
நிலையில் தாயார் காணியை விற்பனை செய்து அந்த கடனில் இருந்து அவரை மீட்டுள்ளார்.

இதையடுத்து, மீண்டும் அந்த கேம் விளையாடுவதற்காக தாயாரிடம் ஐந்து இலட்சம் ரூபா கேட்ட
நிலையில் தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட
மனவிரக்தியால் கடந்த 25 ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார்.
மரண விசாரணை
இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


