யாழ். தையிட்டி – திஸ்ஸ விகாரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும்,
காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும் இன்று திங்கட்கிழமை போராட்டம்
நடத்தவுள்ளனர்.
தையிட்டி – திஸ்ஸ விகாரையில் பொலிஸார், இராணுவத்தின் முழுமையான பங்களிப்புடன்
இன்று விழாவொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று போராட்டம்
இந்த விடயம்
தொடர்பில், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மாதந்தோறும் போராட்டம்
மேற்கொள்ளும் தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதையடுத்தே, விகாரைக்கு
எதிராகவும் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் அவர்கள் இன்று போராட்டம்
நடத்தவுள்ளனர்.

இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ள இந்தப்
போராட்டத்தில், பொதுமக்களும் சிவில் அமைப்புகளும் பெருமளவில் கலந்துகொள்ள
வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

