வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ் பெண்ணொருவர் பொறுபேற்றுள்ளார்.
யாழை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகனே இவ்வாறு பதவியேற்றுள்ளார்.
இந்தநிலையில், நேற்று (14) அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிர்வாக சேவை
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி நிர்வாக
சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு
செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமனம் பெற்ற அவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை
தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

