இலங்கை விமானப்படைக்குச் (Sri Lanka Air Force) சொந்தமான K8 போர் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையில் (Trincomalee) உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்து இன்று புறப்பட்ட ஜெட் விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
போர் பயிற்சி விமானம்
K8 போர் பயிற்சி ஜெட் விமானம் ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.