வட மாகாணத்தில் இயங்கிவரும் றீ(ச்)ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணையில் பாதுகாவலர்களுக்கான (Security guard) வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த பணிக்கு உடனடியாக 25 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கையின் சுற்றுலா தளங்களுள் தாயகத்தில் உருவாகப்பட்டுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை மக்களிடையே வெகுவாக பிரபலமடைந்து வருகிறது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை
இந்த பண்னையானது நாட்டுமக்களை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் பிரபலமடைந்துள்ளது.

ஐபிசி தமிழ் மற்றும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் குழும தலைவரும், பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனின் நேரடி மேற்பார்வையின் கீழ் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பாதுகாவலர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். குறித்த வெற்றிடங்களுக்கு தகமையானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை அனுப்பி வைக்க முடியும்.
மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள +94 77 777 2353 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

