தொழுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடபலாத மற்றும் பல பகுதிகளில் அனர்த்தத்தினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டு எந்தவொரு உதவியும் கிடைக்காமல் தவிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
லங்காசிறி ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாதிக்கப்பட்ட மக்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட குறித்த பகுதிக்கு எந்தவொரு அரசியல்வாதிகளோ, கிராமசேவகர்களோ வருகைதரவில்லை எனவும் அதற்குரிய பாதைகள் சரியாக இல்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும், அரசாங்காத்தால் கிடைக்கு எந்தவொரு நிவாரணமும் குறித்த பகுதிமக்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகி்றது.
25ஆம் திகதி முதல் இதுவரைக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொள்ளவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

