கிளிநொச்சியில் (Kilinochchi) தமிழ் பேசும் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனம்
கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு தமிழ்மொழி பேசக்கூடிய பொறுப்பதிகாரி
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் கிளிநொச்சி மக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை
இனி தாய்மொழியில் நேரடியாக முன்வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பிரதேசங்களில் தமிழ் அதிகாரிகளை நியமிக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP)
அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்நியமனம்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொறுப்பதிகாரி
குறித்த பொறுப்பதிகாரியாக எம். சுல்தான் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முயற்சி, தமிழ் பேசும் மக்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையிலான
தொடர்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

