கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோப்பாய்
காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெயரில் பதாகைகள்
கட்டப்பட்டுள்ளன.
கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல்
பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.
தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட
பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால்,
காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில்
கட்டுப்படுத்தப்படிருந்தன.
திடீர் இடமாற்றம்
இந்தநிலையில், பொறுப்பதிகாரிக்கு பதுளைக்கு திடீர் இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி பேசக்கூடிய காவல்துறை அதிகாரிகள் கடமையாற்ற
வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில் , தமிழ் மொழி பேசக்கூடிய
பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பதாகைகள்
கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.