யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே தெரிவித்துள்ளார்.
தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே குறிப்பிட்டுளார்.
வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் B. லியனஹமகே தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
காணி விடுவிப்பு
இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, கடல்வழியால் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணி விடுவிப்பு, வட தாரகை கப்பல் திருத்தம், எழுதாரகை கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல்.

கடற்கரை தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு பொறிமுறை, கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

