யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில்
பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் நேற்று இரவு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மாமுனை பகுதி
முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா
இச்சுற்றிவளைப்பில் 71.4 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய 38 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரும் தப்பி சென்றுள்ளார்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

