முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு

புதிய இணைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்ற ரீதியிலும், நிதியமைச்சர் என்ற ரீதியிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB), தேசிய மக்கள் சக்தி (NPP), மற்றும் பஃப்ரல் நிறுவனம் ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு | Local Election Ruling By Supreme Court Today

கடந்த வருடம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு | Local Election Ruling By Supreme Court Today

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையினூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களைத் தாக்கலை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith madduma bandara)உள்ளிட்ட 4 தரப்பினர் செய்துள்ளனர்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு 

இதனடிப்படையில் குறித்த வழக்கின் தீர்ப்பு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் ஒன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு | Local Election Ruling By Supreme Court Today

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டன.

எனினும் அன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் குறித்த வழக்கு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.