யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர்.
பெப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தினம் களை கட்டியிருந்தது.
வீதிகள் அசிங்கப்படுத்தப்பட்டமை
இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதியதுடன் வீதிகளையும் அசுத்தப்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு வீதிகள் அசிங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.