வடக்கில் இருந்த முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியாலங்களில் வெளியேறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தமை தமக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியதாக முஸ்லிம் பெண்ணொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமக்கு உரிமையான சில பொருட்களை தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்து செல்வதற்கு தடை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

