நவாலி பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ்தேசிய உணர்வாளர்களின் ஒழுங்கமைப்பின்
கீழ் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
நவாலி
பிரசாத் சந்தியில் அமைத்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் பிற்பகல் 06.05
மணியளவில் 1985இல் வீரகாவியமான
மாவீரர் வீரவேங்கை குட்டி (சின்னத்தம்பி பரமேஸ்வரன்) தாயார் சின்னத்தம்பி சிவபாக்கியதால் பிரதான மாவீரர் சுடர்
ஏற்றப்பட்டுள்ளது.
மாவீரர் தினம்
தொடர்ந்து பொதுமக்களின் மலரஞ்சலி நிகழ்வுகளுடன் எழுச்சியாக
மாவீரர் தினம் நினைவேந்தப்பட்டது .
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் அருள்குமார் ஜோன்ஜிப்பிரிக்கோ உள்ளிட்ட
அரசியல் பிரமுகர்களும் ஊர் மக்களுடன் இணைந்து மாவீரர்களை அஞ்சலி செய்தனர்.



