சிறையில் உள்ள எந்தவொரு குற்றவாளியும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சோதனை செய்யப்படுவார்கள்.
அதே நேரத்தில், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண் கொண்ட ஜம்பர் வழங்கப்படுகிறது, மேலும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் உட்பட மற்ற அனைத்து பொருட்களும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன அல்லது சிறைச்சாலையின் காவலில் வைக்கப்படுகின்றன.
ஒரே நடவடிக்கை
அதன்படி, இன்று சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே(mahindananda aluthgamage) மற்றும் நளின் பெர்னாண்டோ(nalin fernando) ஆகியோருக்கும் இதே நடவடிக்கைகள் பொருந்தும்.

நீதிமன்றம் இருவருக்கும் முறையே 20 மற்றும் 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

