குருநாகல்(Kurunegala) – எஹட்டுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கத்துருவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எஹட்டுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
குறித்த நபர் நேற்று அதிகாலை தனது வீட்டுத் தோட்டத்துக்குள் நுழைந்த காட்டு யானையை
விரட்ட முயன்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

