வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் (Mannar) திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப்
பெருந்திருவிழாவை முன்னிட்டு விசேட திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (19.05.2024) இரவு 7 ஆம் நாளாக நடைபெற்றுள்ளது.
விசேட பூஜைகள்
இதனை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நாளை 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










Source: https://tamilwin.com/article/mannar-thirukkedeeswara-temple-mahotshavam-2024-1716180972

