முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை!

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றுவரும் காற்றாலை இரண்டாம் கட்ட
செயற்திட்டத்துக்கு எதிராக மன்னார் மாவட்டம் மாத்திரம் இல்லாமல் பல்வேறு
மாவட்டங்களிலும் தொடர்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது.

இந்நிலையில், காற்றாலை செயற்திட்டத்தின் கட்டுமான பணிகள் எவையும் இனி இடம் பெறாது என மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு பொலிஸார் உத்தரவாதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

தடை உத்தரவு

வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக தற்போது மன்னார் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காற்றாலை
பாகங்களை மாத்திரம் மன்னார் மாவட்டத்துக்குள் அனுமதிக்க மன்னார் நீதாவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை! | Mannar Wind Farm Project Banned

மன்னார் பொலிஸாரால் இன்றையதினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில்
போராட்டகாரர்களுக்கு எதிராக தடை உத்தரவு பெரும் நோக்கில் தொடுக்கப்பட்ட
வழக்கின் போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்றைய தினம் அதிகாலை காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிசென்ற வாகனத்தை
போராட்டகாரர்கள் தடுத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து
பொலிஸார் நீதிமன்றத்தில் சில போராட்ட காரர்களுக்கு எதிராக தடையுத்தரவை
வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொலிஸாரின் உத்தரவாதம்

இந்த நிலையில் குறித்த போராட்டம் எந்த வகையிலும் பொது மக்களுக்கு இடையூறு
ஏற்படுத்தவில்லை என்றும் இது ஜனநாயக ரீதியாக இடம் பெற்ற போராட்டம் என்ற
அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மேற்கொண்ட சமர்பணத்தின்
அடிப்படையில் போராட்டகாரர்களுக்கு எதிராகவோ போராட்டத்துக்கு எதிராகவோ அவ்வாறான
எந்த கட்டளையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை! | Mannar Wind Farm Project Banned

இதன்படி தற்போது மன்னார் எல்லைக்குள் வருகை தந்துள்ள கணரக வாகனங்களை மாத்திரம்
போக்குவரத்துக்கு இடஞ்சல் ஏற்படாத வகையில் உரிய இடங்களுக்கு செல்ல
அனுமதிக்குமாறும் குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை 14 நாட்களுக்கு
காற்றாலை செயற்திட்டங்களின் எந்த ஒரு கட்டுமான பணிகளும் இடம் பெறுவதை
தடுக்கும் வகையிலும் பொலிஸாரின் உத்தரவாதத்தின் அடிப்படையில் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.