யாழ் (Jaffna) செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200
பேர் வரையில் பார்வையிட்டுள்ளனர்.
புதைகுழிகளில் இருந்து மீட்கபபட்ட சான்று பொருட்கள் நேற்று (05)
செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மக்கள் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை சுமார் 200 பேர் வரையில் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
காட்சிப்படுத்த நடவடிக்கை
தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இனிவரும்
காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால்
அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

