22 நாட்களுக்கு பிறகு மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் சம்பத் வித்யாரத்ன தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலால் மலையகத்திலுள்ள தொடருந்து பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன.
பதுளை – அம்பேவளை
இந்நிலையில் பதுளை முதல் அம்பேவளைவரையிலான தொடருந்து சேவை இன்று ஆரம்பமானது.

இந்நிலையில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








