யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்த நபருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.
அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்ததுடன் 10 இலட்சம் ரூபா இன்னமும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் தலைமறைவு
அதன்படி, பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


