யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர்
காணாமல் போன நிலையில் நேற்று(05) பாதுகாப்பாக
மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு படகு ஒன்றில்
சென்றுள்ளனர்.
படகு பழுதடைந்த நிலையில்
இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் திரும்பி வராத நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இணைந்து
ஈடுபட்டனர்.

இதன்போது படகு பழுதடைந்த நிலையில் இரண்டு கடற்றொழிலாளர்களும் கடலில்
தத்தளித்தபோது தேடிச் சென்ற கடற்றொழிலாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

