நயினாதீவு நாகபூசணி அம்மனின் ஆலயத்தில் பிக்கு மற்றும் தென்னிலங்கையிலிருந்து வந்த சிலர் பாதணியோடு செனறமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடல் கடந்து இலட்சோப இலட்சம் மக்களுக்கு அருள் பாலிப்பவள் நயினை நாகபூசணி தாய்.
இந்த ஆலயத்தில் புனிதம் பேணப்படவேண்டுமென்பது நியதி.தமிழ் மக்களின் புனித இடத்தில் பிக்கு ஒருவரும் தென்ிலங்கையிலிருந்து வரும் சிலரும் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்கக்கூடியதல்ல என விசனம் தெரிவிக்கின்றனர் இந்துக்கள்.
நீண்ட பெரும் வரலாற்றை கொண்ட நயினை நாகபூசணியின் புனித தன்மை தொடர்நதும் பேணப்படவேண்டியதும் அவசயம் எனவும் இந்துக்கள் வலியுறுத்துகின்றனர்.
https://www.youtube.com/embed/iM1sLgMGLjs

