அருணாச்சல பிரதேச எல்லைகளில் சீனா அதிக அளவு படைகளை குவித்துள்ள நிலையில் இந்தியாவானது அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட அதி சக்திவாய்ந்த ரேம்பேஜ் என்ற ஏவுகணையை தனது விமானப்படைகளிலும் கடற்படைகளிலும் இந்தியா இணைத்துள்ளது.
பதவி விலகினார் வியட்நாம் சபாநாயகர்! பின்னணியில் ஊழல் குற்றச்சாட்டு
வேகம்
குறித்த ஏவுகணையானது, 250 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இலக்கை கூட துல்லியமாக தாக்கக் கூடிய திறன் கொண்டது.
அத்தோடு, இது ஒலியை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் பயணித்து இலக்கை தாக்கும் எனக் கூறப்படுகிறது.
இராணுவ பலம்
புதிதாக சேர்க்கப்பட்ட இந்த ஏவுகணையினால் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் திறன் மேலும் அதிகரிக்கும் என்று அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரேம்பேஜ் ஏவுகணை சுகோய்-30 எம்கேஐ மற்றும் மிக்-29 ஆகிய போர் விமானங்களில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் இலவச வைஃபையை வழங்கும் நாடு எது தெரியுமா…!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |