முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் தாயும் இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது..! கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு

முல்லைத்தீவு(mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம்
பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின்
கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த
தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து
சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள
வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக இன்று(24)
மீட்கப்பட்டுள்ளனர்

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

கிணற்றின் அருகில் காணப்பட்ட பொருட்கள்

இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள்
சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம
அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த
கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினர் கிணற்றில் உடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.

முல்லைத்தீவில் தாயும் இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது..! கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு | Mother And Two Children Dead In Well In Mullaitivu

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு
வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் உடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது

  கிணற்றுக்குள் கிடந்த சடலங்கள்

மீட்கப்பட்ட உடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று
பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முல்லைத்தீவில் தாயும் இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது..! கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு | Mother And Two Children Dead In Well In Mullaitivu

 உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி( வயது38) தாய் மற்றும் உசாகரன்
மிக்சா ( வயது11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்

உயிரிழப்புக்கான காரணம் என்ன..!

இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில்
மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் தாயும் இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது..! கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு | Mother And Two Children Dead In Well In Mullaitivu

 தாயும் இரண்டு பிள்ளைகளும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் துணயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.