இலங்கையில் வாய்ப் புற்று நோய் வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் வாய்ப் புற்று நோய் காரணமாக அதிகளவிலான நோயாளிகள் இறக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது.
வாய்ப் புற்று நோய்
இலங்கையில் நாளாந்தம் குறைந்த பட்சம் 3 பேர் வீதம் வாய்ப்புற்று நோய் காரணமாக உயிரிழந்து கொண்டிருப்பதாக தேசிய புற்றுநோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று வருடம் தோறும் சுமார் 3100 பேரளவிலான வாய்ப் புற்று நோயாளிகள் இலங்கையில் உயிரிழந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

