முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மியன்மாரில் இருந்து வந்த ஏதிலிகளை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை


Courtesy: H A Roshan

மியன்மாரில் (Myanmar) இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ஏதிலிகள், முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்ததன் பின்னர் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

அகதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ச. டெ. சஷ்னி குறித்த நபர்கள் சந்தேக நபர்களன்றி அகதிகளாக கருதப்பட வேண்டும் எனவும் இவர்களை நுகேகொடையில் உள்ள அகதிகள் தங்குமிடமான மிரிகானைக்கு அனுப்புமாறு தனது விண்ணப்பத்தை பதில் நீதிவானிடம் முன்வைத்தார்.

தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் 

அதனை ஏற்றுக்கொண்ட பதில் நீதவான் குறித்த மிரிகானை பகுதிக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

மியன்மாரில் இருந்து வந்த ஏதிலிகளை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை | Myanmar Refugees To Send Refugees Camp

தற்போது அனுப்ப முடியாத நிலை உள்ளதால் இன்று (21) குறித்த அகதி முகாமுக்கு அனுப்பலாம் என அவர்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பொலிஸார் 115 நபர்களில் 103 நபர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று (20) இரவு முன்னெடுத்தனர்.

திருகோணமலை துறைமுக பொலிஸார் குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கினை பதிவு செய்து படகு ஓட்டுநர், உதவியாக இருந்தவர்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை செய்த குற்றச்சாட்டில் 12 நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறும் குறித்த பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த 103 நபர்களுக்குத் தேவையான உணவு சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து உரிய பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.