இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கங்கவின் (Nandalal Weerasinghe) பதவி தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்ந்தும் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக பராமரிப்பதற்காக அவர் நிச்சயம் பதவி வகிப்பார் என குறிப்பிடப்படுகிறது.
புதிய ஜனாதிபதி
மேலும், அதற்கு புதிய ஜனாதிபதியும் மத்திய வங்கி ஆளுநரின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறப்படுகிறது.