நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் மரணித்த எந்த விலங்கின் இறைச்சியும் சந்தைக்கு விடப்படவில்லை. இது தொடர்பாக பரவும் வதந்திகள் பொய்யானவை என்று அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பண்னைகளின் சேதங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முக்கியமாக, தெதுரு ஓயாவிலிருந்து சிலாபம் வரையிலான அனைத்து பண்ணைகளும் நீரில் மூழ்கின. பண்ணை அமைந்திருந்த ஒரு தூண் கூட கண்டுபிடிக்க முடியாதுள்ளது.
2.8 மில்லியனுக்கும் அதிகமான முட்டையிடும் கோழிகள் இறந்துவிட்டன. நாங்கள் கவலையில் இருக்கிறோம்.
முட்டையின் விலை
மக்களுக்கு 26 முதல் 27 ரூபாய்க்கு விற்கப்படவிருந்த முட்டை திடீரென 45.50 ஆகிவிட்டது. ஆனால் எனக்கு வேறு எதுவும் செய்ய முடியாதுள்ளது.
கிறிஸ்மஸ் காலம் ஆரம்பித்துள்ளதால் இதற்கு இன்னும் அதிக தேவை ஏற்படலாம்.
ஏற்படப்போகும் நெருக்கடி
நாம் ஒரு பாரிய முட்டை நெருக்கடியை சந்திக்க உள்ளோம் என உறுதியாக நம்புகிறேன். இறந்த விலங்குகள் சந்தையில் விற்கப்பட்டதாக ஒரு வதந்தி உள்ளது. அப்படி இல்லை. மூன்று நாட்களுக்குப் பின்னரே இறந்த விலங்குகளைப் பார்க்கச் சென்றேன்.
அவற்றின் கூடுகளுக்கு கொண்டு செல்லக்கூட வழி இல்லை, மூர்க்கத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அவை பொய்யானவை.
யாரும் அழுகிய இறைச்சியை விற்க முடியுமா? இறந்த விலங்குகள் சந்தையில் விற்கப்பட்ட கதை ஒரு அப்பட்டமான பொய்யாகும் என குறிப்பிட்டுள்ளார்.

