முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட சேவைகள்

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் நேற்று (29)
சிறுதுநேரம் வெளிநோயாளர் பிரிவின் வைத்திய சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இந்நிலையில், இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர்
துரைராசா ரவிகரனிடம் முறையிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரன் உதவியுடன் பிறிதொரு வைத்தியரை வைத்திய சேவையில்
ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது. 

வைத்திய சேவை

இதன்போது வைத்தியசாலைக்கு சென்றிருந்த துரைராசா ரவிகரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், “மருத்துவத் தேவைப்பாடுகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட சேவைகள் | No Doectors In Mullaitivu Base Hospital

முல்லைத்தீவு மாவட்ட
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தேவைப்பாடுகள் தொடர்பாக என்னிடம்
ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கின்றார்.

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலை மாத்திரமல்லாது, முல்லைத்தீவு மாவட்ட
பொதுவைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் என்னிடம்
தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த தேவைப்பாடுகள் கு6றித்து ஏற்கனவே எம்மால் சுகாதார அமைச்சரின்
கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் முறைப்பாடு 

இந்நிலையில், தற்போது, முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர்
பிரிவில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வைத்தியர்கள் எவருமில்லை. அத்தோடு வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்கள் அவதிப்படுவதாகவும்
என்னிடம் முறையிடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட சேவைகள் | No Doectors In Mullaitivu Base Hospital

அதற்கமைய இது தொடர்பில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம்
இதுகுறித்து தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தேன். இந்நிலையில் தாம்
உடனடியாகப் பிறிதொரு வைத்தியரை கடமையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை
மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு
ஆதாரவைத்தியசாலைக்கு நேரடியாகவருகைதந்து நிலமைகளைப் பார்வையிட்டிருந்தேன்.

இங்கு பிறிதொரு வைத்தியர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வைத்திய சேவையில்
ஈடுபட்டுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இங்கு நிலவும் மருத்துவத் தேவைகள், வைத்திய ஆளணிப் பற்றாக்குறைகள் உடனடியாகத்
தீர்க்கப்படவேண்டும்” என்றார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.