வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக மழை பெய்யாது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சில நேரங்களில் ஊவா மாகாணங்களில் பருவமழை பொதுவாக மாலையில் பெய்யும் என்று கடமை முன்னறிவிப்பாளர் உதேனி வீரசிங்க குறிப்பிட்டார்.
புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
இலங்கைக்கு அருகில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது என்ற வதந்திகளையும் திணைக்களம் நிராகரித்தது.

புயல் தொடர்பான பொதுமக்களின் அச்சத்திற்கு எந்த காரணமும் இல்லை என்று திணைக்களம் உறுதியளித்தது.

