இலங்கை காவல்துறையில் சேருவதற்கான விதிகளை கோடிட்டுக் காட்டும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் காணொளி வெளியாகி உள்ளது.
அவர் தனது உரையில், பச்சை குத்திய நபர்கள் காவல் துறையினாலோ அல்லது முப்படையினாலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
என்ன பட்டம் இருந்தும் வேலையில்லை
“உங்களிடம் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் இருக்கலாம். ஆனால் உங்களிடம் பச்சை குத்தியிருந்தால் இலங்கை காவல்துறையினாலோ அல்லது முப்படையினாலோ பணியமர்த்தப்பட மாட்டீர்கள்.
தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு. உங்கள் தோலை அழிப்பது நல்லதல்ல, ”என்று அவர் தெரிவித்துள்ளார்.

