ஈரானிய மனித உரிமை ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி ஈரானில் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டார் என நோபல் குழு தெரிவித்துள்ளது.
மேலும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிசை வழங்கும் நோபல் குழு கூறியுள்ளது.
இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் முகமதி முன்னர் பல தண்டனைகளை அனுபவித்துள்ளார்.
பெண்களின் உரிமை
கடந்த ஆண்டு இறுதியில், மருத்துவ சிகிச்சைக்காக சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர், அவர் ஈரானின் எவின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஈரானில் பெண்களின் உரிமைகள் மற்றும் மரண தண்டனை ஒழிப்புக்கான மூன்று தசாப்த கால பிரச்சாரத்தைத் தொடர்ந்து, முகமதிக்கு 2023 ஆம் ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டது.
“முகமதியின் இருப்பிடத்தை உடனடியாக தெளிவுபடுத்தவும், அவரது பாதுகாப்பு மற்றும் நேர்மையை உறுதிப்படுத்தவும், நிபந்தனைகள் இல்லாமல் அவரை விடுவிக்கவும் ஈரானிய அதிகாரிகளை நோர்வே நோபல் குழு கேட்டுக்கொள்கிறது” என்று விருது அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோ தனது விருதைப் பெறுவதற்காக நோர்வேக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தக் கைது நடந்துள்ளது.

இதன்படி “ஈரான் மற்றும் வெனிசுலாவில் உள்ள ஆட்சிகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதைப் போலவே முகமதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நோர்வே நோபல் குழு குறிப்பிட்டுள்ளது.

