முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நோக்கத்துடன் வருகின்றார்களா: கேள்வி எழுப்பியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள்

மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெற்றாலும் கூட, இந்திய கடற்றொழிலாளர்கள் ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு வருகின்றார்களா என்ற சந்தேகம்
ஏற்படுகின்றதென அகில இலங்கை
தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்றைய தினம் (19.07.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மை காலமாக எமது கடலில் இந்திய இழுவை படகுகளின் ஆக்கிரமிப்புக்கள் முன்பு
ஒரு காலமும் இல்லாத வகையில் கூடுதலாக உள்ளதை நாங்கள் பார்க்கக்
கூடியதாக உள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நோக்கத்துடன் வருகின்றார்களா: கேள்வி எழுப்பியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் | Northen Provincial Fishermen Press Meet 

கைது நடவடிக்கைகள் 

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையில் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா – இராமேஸ்வரத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசும் கவனம் செலுத்தவில்லை. இதில் மத்திய அரசு
கூடிய கவனம் செலுத்தி படகுகளையும் கடற்றொழிலாளர்களையும் விடுதலை விடுவிக்க வேண்டும்
என்று கடற்றொழிலாளர்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.

தமிழக தொப்புள்கொடி உறவுகளால் தொடர்ச்சியாக எமக்கு இழைக்கப்படும்
துன்பங்களும், துயரங்களும், வேதனைகளுமாகவே இவற்றை நாம் பார்க்கின்றோம்.

புரிந்தும் புரியாதது போல் நடந்து கொண்டு, இந்தியாவில் இருந்து எமது
பகுதிக்குள் வந்து தாமும் துன்பத்துக்குள் சிக்கிக் கொண்டு எங்களையும் வாழ
விடாமல் துன்பத்துக்குள்ளே தள்ளுகின்றார்கள்.

நடத்தப்பட்ட போராட்டங்கள் 

நீங்கள் உங்களது கடற்பரப்பில் இருக்கின்ற மீன்களை பிடித்து வாழ்வாதாரத்தை
ஈட்டிக் கொள்ளுங்கள். அல்லது மத்திய, மாநில அரசுடன் பேசி உங்களுக்கு
தேவையான வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நோக்கத்துடன் வருகின்றார்களா: கேள்வி எழுப்பியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் | Northen Provincial Fishermen Press Meet

இரண்டு அரசாங்கங்களும் சேர்ந்து கடற்றொழிலுக்கு உங்களுக்கு அனுமதி தந்தாலும்
கூட எமது உயிர் இருக்கின்றவரை நாம் நமது வளத்தை அடுத்த நாட்டிற்கு கையளிக்கவோ,
வளங்களை சூறையாடிச் செல்லவோ நாங்கள் விட மாட்டோம்.

எமது உயிரை கொடுத்தாவது
அந்த வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முயற்சிப்போம்.

மடமைத்தனமாக அரசாங்கத்தை வற்புறுத்தி போராட்டத்தை நடத்துவதை கைவிடுங்கள்.

அனைவரும் ஒன்றுகூடி ஒரு பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு பகுதியும்
வாழக்கூடியதாக ஒரு நிலைப்பாட்டை எட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.