NORTHERN UNI ஆனது மாணவர்களிடையே மாணவர்களின் செயற்றிறனை வெளிக்கொணரும் வகையில் செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
Northern UniSAT மாணவர் செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் புதன்கிழமை (05.03.2025) இலங்கை முழுவதும் 32 பரீட்சை நிலையங்களில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மாலை 3 மணிமுதல் 4 மணிவரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள்
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யும் முதல் 300 மாணவர்கள் அனுமதிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிக்கான தேர்வில் அவர்களின் செயற்திறனின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முதல் 2 மாணவர்கள் (மொத்தம் 50 பேர்) இந்தியாவின் இஸ்ரோவில் (ISRO) செயற்கைக்கோள் ஏவுவதனை காண்பதற்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 0217534807 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.