தாதியர்களின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவால் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (20) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீருடையை மாற்றுவது அவசியம்
சுகாதாரத் துறையில் உள்ள எந்தவொரு நிபுணரோ அல்லது வேறு எவரேனும் ஒரு சுகாதாரத் துறை தொழிலின் சீருடையை மாற்றுவது அவசியம் என்று கருதினால், அந்தக் குழுவிடம் ஒரு முன்மொழிவை முன்வைக்க வேண்டும்.

சீருடையை மாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறை சூழ்நிலையை பரிசீலித்த பிறகு குழு ஒரு முடிவை எடுக்கும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

