கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வைத்து நவீன ஆயுதமொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரின் மேலதிக சோதனையின் போது வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம் ஒன்றும் அவரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
அதனையடுத்து, சந்தேகநபரை கைது செய்துள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

