பொதுப் போக்குவரத்திற்காக மின்னணு கட்டண முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை போக்குவரத்து ஆணையம் (Sri Lanka Transport Authority) தெரிவித்துள்ளது.
பணப் பயன்பாட்டைக் குறைத்து பயணிகளுக்கு வசதியை வழங்குவதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அட்டைகள்
அத்தோடு, வங்கி அட்டைகள் மூலமாகவும் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்காலத்தில் ஒவ்வொரு பேருந்திற்கும் மின்னணு கட்டண சாதனங்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.