மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்ற நிலையில், அதற்கு போதியளவு ஆதாரமும்
இருப்பதோடு இதை அநுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடக்கு
மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து
எதேச்சதிகாரமிக்கது.
முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று
கூறியதை ஏற்க முடியாது.
அநுர அரசும் ஏனைய அரசு போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வை வழங்குவதில்
இருந்து விலகிச் செல்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/G8lYnS2xx2o