2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்(jaffna) காணாமல் போன இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று(18) உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பாதுகாப்பு செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு(gotabaya rajapaksa) வழங்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 30 ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

