வவுனியாவில் ஒசுசல அரசாங்க மருந்தகம் விரைவில் திறக்கப்படும் என சுகாதார
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்
ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அமைச்சரவை மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் தன்னிடம் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் நாடாளுமன்ற அமர்வின் போது வவுனியா மாவட்டத்தில் அரசாங்க மருந்தகம்
ஒன்றினை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதனால் குறைந்த விலையில் மக்கள்
மருந்துகளை வாங்க முடியும் என்றும் கோரிக்கை வைத்திருந்தேன்.
அரசாங்க மருந்தகம்
அதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் அரசாங்க மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்களில்
ஒசுசல மருந்தகங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர்
தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்
கூட்டத்தில் இந்த விடயத்தை மீண்டும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
இதன்போது, வவுனியாவில் விரைவில் அரசாங்க மருந்தகம் திறக்கப்படவுள்ளதாக
அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.