முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யார் கொலையாளிகள்: நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்

1989 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர
திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன
ஆகியோர் பரஸ்பரம் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் நேற்று நாடாளுமன்றத்தில் தீவிரமான வாத விவாதங்கள் இடம்பெற்றன.

முன்னாள் அமைச்சரான தனது தந்தை,1989 பொதுத் தேர்தலுக்கு பிரசாரம் செய்தபோது
எட்டு பேரைக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிரத்ன பொய்யான கூற்றை
முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிரத்ன குற்றம் சாட்டியபோது வாக்குவாதம்
ஆரம்பமானது.

“எனது தந்தை யாரையும் கொலை செய்யவில்லை, ஏனெனில் அவருக்குப் பைத்தியம்
பிடித்ததில்லை” என்று ரோஹிணி கவிரத்ன கூறினார்.

தனிப்பட்ட விடயங்கள் 

பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர, 1989ஆம் ஆண்டு மாத்தளையில் 140
இளைஞர்கள் படுகொலைகளில் யார் ஈடுபட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கொலைகளுக்குப் பின்னால்
யார் இருக்கிறார்கள் என்பது விரைவில் வெளியிடப்படும், என்று அவர் கூறினார்.

யார் கொலையாளிகள்: நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம் | Parliament Sitting Yesterday

இந்த நேரத்தில் குறுக்கிட்ட அரசாங்க தலைமை அமைப்பாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, ரோஹிணி
கவிரத்ன அல்லது வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தனிப்பட்ட விடயங்களை
எழுப்புவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணாக்கக்கூடாது என்று
குறிப்பிட்டார்.

ஒரு கட்சியின் தலைவர் ஒரு முக்கியமான விடயத்தில் நிலையியல் கட்டளையின் கீழ்
கேள்வி எழுப்பலாம்.

அதேநேரம், எந்த ஒரு உறுப்பினரும், சபாநாயகரைச் சந்தித்து முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு விடயத்தைப் பற்றி அவருக்கு விளக்கிய பின்னர், அமர்வுகளின் போது
அந்த விடயத்தை எழுப்பலாம்.

இருப்பினும், எந்த உறுப்பினரும், சபையில் தனிப்பட்ட விடயத்தை எழுப்ப முடியாது
என்று நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.