கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து, ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்துத் தாக்கிய சம்பவம் தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் சப்புகஸ்கந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மொட்டு பிரதேச சபை உறுப்பினரும் தற்போதைய பிரதேச சபை உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இருவரும் இன்று. நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

