யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் தனதாக்கிக் கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றையதினம்(18.12.2025)மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா மற்றும் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அத்தோடு, மாநகரசபைக்கு சொந்தமான காணியை தவறான உறுதி முடித்து தனிநபர் ஒருவர் தனதாக்கி கொண்டுள்ளதாக சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த காணி சம்பந்தமான சகல ஆவணங்களையும் ஆணையாளருக்கு அனுப்பி மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெகுவிரைவில் எமதாக்கிக் கொள்வோம் எனவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

