முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் அதிகரித்த பாதிப்பு விபரம்

புதிய இணைப்பு 

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த
49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள்
காயமடைந்துள்ளது.

அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 276 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 4547
நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி – தீபன்

மேலும், நாட்டில் ஏற்றபட்ட இயற்கை பேரனர்த்ததை தொடர்ந்து இலங்கை அரச மருத்து
அதிகாரிகள் சங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் அதிகரித்த பாதிப்பு விபரம் | Person Dies Due To Extreme Bad Weather In Jaffna

இது தொடர்பில் வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதி கதிரமலை
உமாசுதன் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சென்று சிகிச்சை மற்றும்
சுகாதார மருத்து ஆலோசனைகளை வழங்கிவரும் மருத்து பணியாளர்களுக்கும் அவர்
நன்றிதெரிவித்தார்.

செய்தி – எரிமலை

முதலாம் இணைப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

11 ஆயிரத்து 193 குடும்பங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் 5 ஆயிரத்து 243 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 51 இடைத்தங்கல்
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை

அத்துடன், சீரற்ற காலநிலையால் இருவர் காயமடைந்தனர். இரு வீடுகள் முழுமையாகவும் 256 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக செய்தி – கஜிந்தன்

யாழில் அதிகரித்த பாதிப்பு விபரம் | Person Dies Due To Extreme Bad Weather In Jaffna

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக
வீடுகளில் இருந்து இடக்கால அனர்த்த முகாம்களில் 9 குடும்பங்கள் தங்க வைக்க
பட்டுள்ளனர்.

இவர்களில் நாகர் கோவில் கிழக்கு பகுதியில் இருந்து 7குடும்பங்கள்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நாகர் கோவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர்
அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றும் ஆழியவளை பகுதியில் இரண்டு
குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் பாதுகாப்பாக உள்ளனர்.

.தன்படி தங்க வைக்க பட்ட குடும்பங்களுக்கான உணவு வசதிகளை வடமராட்சி கிழக்கு பிரதேச
செயலகம் ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றதோடு

அவர்களுக்கான மருத்துவ பொருட்கள் உதவியினை தன்னார்வளர்களின் நிதி அனுசரணையில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின்
ஏற்பாட்டில் அனர்த்த இடக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கு
இன்றைய தினம் காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

செய்தி – எரிமலை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.